ஈணம் என்னும் கவிதை நிகழ்த்தும் முறைக்கு நாம் கொஞ்சமும் பழக்கப்படவில்லை ஆனால் கேரளத்தில் அது மிக பரிச்சயமான ஒரு முறை. கவிதையை கிட்டத்தட்ட ஓதுதல் நிலைக்கு தள்ளி ஒவ்வொரு நிலைக்கும் இடைவெளி கொடுத்து மீண்டும் ஓதி. ஒரு மெளனத்தில் நிறுத்தி நம்மை வனாந்திரத்துக்குள் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இப்படி மெளனம் முடியும் இடத்தில்தான் அந்தக்கவிதையை கவிஞன் கைவிட்டுவிடுகிறான். அல்லது நமக்கு கைமாற்றிவிட்டு உறைந்துபோய்விடுகிறான்..அதற்குப்பிறகு அது நமது சொற்க்களன்ற அடியாளத்தில் இறங்கி சவ்வூடுபரவலை நிகழ்த்துகிறது.
ஈணம் குறித்து ஸ்ரீ யிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது பல நகைச்சுவையான விசயங்களை பகிர்ந்துகொண்டார். சீரியசாக அவர் பகிர்ந்துகொண்டது பேராசிரியர் மதுசூதன நாயரின் நாராணத்து பிராந்தன் என்னும் புகழ்பெற்ற ஈணம்.
யார் இந்த நாராணத்துப்பிராந்தன்?
விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சர் வரருசி ஒரு பிராமணன் 'விதிப்பயனாக’ அவன் ஒரு பறைப்பென்ணை மணக்க நேர்கிறது.
அது பறைப்பெண் எனத்தெரிந்ததும் தன்னைதானே சாதிவிலக்கம் செய்துகொண்டு ஊரை காலிசெய்துவிட்டு காடுகளிலும் மலைகளிலும் அந்தப்பெண்ணோடு அலைகிறான். அப்படி அவன் அலையும் காலத்தில் வருடத்துக்கு ஒன்றாக பதினோறு குழந்தைகளை பெறுகிறார்கள் அப்படிப்பெற்ற குழந்தைகளில் நாரணத்து பிராந்தன் எட்டவது குழந்தை
பிராந்தன் பிறக்கும்போதே படுசுட்டி வளர்ந்த பிறகு வானவியல் வல்லுநர் .. அடிக்கடி அந்த வல்லுநரை சுடுகாட்டில் பார்க்கலாம். பிணம் எரித்த சாம்பலை எடுத்து பூசிக்கொண்டு இடுகாடு வரைக்கும் புரண்டுகொண்டிருப்பான் எலும்புகளை தலையில் வைத்துக்கொண்டு ருத்திரக்கூத்தாடிக்கொண்டிருப்பான். .ஆற்றங்கரைகளில் மல்லாக்க படுத்துகொண்டு நட்சத்திரங்களோடு உரையாடி நிலாவை தண்ணீருக்குள் அமிழ்த்தி மூச்சு திணறவைப்பான் இப்படி இருந்தால் வழக்கமாக எல்லோருக்கும் கிடைக்கும் ’பிராந்தன்’ பட்டம் அவனுக்கும் கிடைத்தது. பாலக்காட்டுக்கு அருகில் ஒரு சிற்றூரில் நம்பூதிரியின் நாராயணமங்கலம் என்னும் மனையில் வளர்ந்ததால் .அவன் நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டான் .
நாராணத்து
பிராந்தனின் அன்றாட வேலைகளில் மிக முக்கியமான ஒன்று, ராயர் நல்லூர் என்னும் மலைக்கு கீழிருக்கும் பாறை ஒன்றை உருட்டி உருட்டி... மலை உச்சிக்கு கொண்டு போவதும்...
கொஞ்ச நேரம் கழித்து அதை அப்படியே மலையில் இருந்து உருட்டிவிடுவதும்தான். இதில் என்ன
ஆச்சரியம் என்றால் அவன் அந்தப்பாறையை கைகளால்
தொடமாட்டான் கைகளை தள்ளுவது போல் காட்டினாலே
பாறை மேலே நகர ஆரம்பித்துவிடும். ( கிட்டத்தட்ட கிரேக்க சிசிபஸ் )
இப்போது கேரளத்தில் நாரணத்து பிராந்தன் தெய்வம்...
இப்படி... எல்லா ஈனங்களும் கிட்டத்தட்ட ஒரு கதையை போலவே தொடங்கி கவிதையாய் முடிகிறது அல்லது கதையபோல
தொடங்கி கவிதையாகிவிடுகிறது. அதற்குள் அது அவ்வபோது எதைவேண்டுமானாலும் இழுத்துக்கொள்ளும்
ஈணம் தமிழில் இருக்கா? என்று கேட்டால் இல்லை..... ஆனா
இருக்கு என்றுதான் சொல்லமுடியும். நமது அனுபல்லவிகளும் தொகையறாக்களும் அந்தவகையை சார்ந்தவைதான். என் டி ராஜ்குமாரை அறிந்தவர்களுக்கு சட்டென நினைவுக்கு
வந்துவிடும். அவர் கவிதையை சொல்பவரில்லை.. நிகழ்த்துபவர். தமிழின்
மிக முக்கியமான கலை ஆளுமை. ஒடக்கு, ரத்த சந்தணப் பாவை,
காட்டாளன், கல் விளக்குகள் போன்ற தொகுப்புகளை தமிழுக்கு தந்தவர். தலைசிறந்த பாடகர்; நாடகக்கலைஞர்; அவர் பெருங்குரலில்
பாடத்தொடங்கி ஒரு மந்திரகயிற்றால் நம்மை
கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர்.
என் டி ஆரின் ஈணங்கள் குறுந்தகட்டின் வெளியீட்டுவிழா சென்ற ஞாயிறு கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்றது. மாண்டேஜ் ஸ்டுடியோவும் முகம் பதிப்பகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
அரங்கம் நிறையவில்லை
அது தேவையானதும் இல்லை.
ஒரு
வழியாக நிகழ்வு தொடங்கிவிட்டது
மந்திரித்த
சொற்களை எறிவதற்கான ஆயத்தங்களோடு என் டி ஆர்
எழுந்தார்.
ஒரு
பிரளயத்ததுக்கு முந்தைய நிசப்தம் அங்கே நிறைந்திருந்தது ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் பூமிக்குள் புதைத்து கிடந்த ஒரு தொல்குடி
அரங்கின் மையத்தை பிளந்துகொண்டு எழுந்து நின்றது. தெற்கு மூலையிலிருந்து ஒரு
தொண்டகப்பறையின் முழக்கம் வீதிகளைக் கடைந்து
ஆற்றைக்கடைந்து வலிகளை கடைந்து திரட்டிவந்த இசைத்துணுக்குகளை அரங்கத்தில் அள்ளிதெளித்தது.
அது
யாருடைய கண்ணீரையும் கேட்கவில்லை. யாருடைய இரங்கலையும் கேட்கவில்லை நாம் தப்பிக்க நினைக்கும்
ஒவ்வொரு கணத்தையும் வழித்தடங்களையும் எப்படியோ அறிந்து கொண்டு கூட்டை பிரித்து உள்ளிறங்கியது
கன நேரத்தில் சிறிய மனத்துணுக்கைமட்டும் கொத்திக்கொண்டுபோய்
உச்சிக்கிளையில்…. யார் வேண்டுமானாலும் முட்டைகளை இடுவதற்கும் குஞ்சுகளை வளர்பதற்குமான
சுதந்திரத்தோடு கூடிய புதிய கூடொன்றைக் கட்டத்தொடங்கியது.
சுழல்காற்று
மெல்ல வலுக்கத்தொடங்கியது. நாயுருவி விதைகளாலும் வெட்டுக்கிளிகளின் எச்சங்களாலும் நிரம்பியிருந்த
இரண்டு கலயங்களோடு வந்த ஒரு ஜன வசிய மருத்துவன். தனது குறிப்புகளை ஏவத்தொடங்கினான்
ஓடுகளுக்குள் ஒளிந்திருந்தவர்கள்.................
சிறுகடியெறும்பாகி
யானையின் காது தேடி பிளிரிநின்றார்கள்
அதிகாலையில்
துவைக்கபடும் அழுக்குத்துணிக்கு ஆற்றில் ஒரு கல்லானார்கள்
மகனின்
புணர்தலுக்கு இடமளிக்க விசம் கேட்டு, தனது சோற்றில் கலந்து பிண்டாமானார்கள்
வர்மத்தின்
முடிச்சு தேடி சிலரது ...கால் பெரு விரல்கள் வீதிக்கு போயிருந்தது
தன் நிறம் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஓரு பொயட்டிக்கல்
அனிமல் மட்டும் மீண்டும் பொலிட்டிகல் அனிமலானது
குறிப்பு
கிரேக்க வீரனான சிசிபஸ் மன்னிக்கமுடியாத தவறு செய்தான் என்று குற்றம் சாட்டிய கடவுள் ஒரு சாபமிடுகிறது அந்த சாபம் கிட்டத்தட்ட நமது பிராந்தன் செயலை ஒத்ததாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பிராந்தன் விருப்பப்பட்டு செய்ததை சிசிபஸ் கட்டாயத்தின் பேரில் செய்கிறான். . இதோ அந்த சாபம் ..... சிசிபஸ் தினமும் ஒரு பெரிய உருண்டைக்கல்லை பக்கத்தில் இருக்கும் மலைஉச்சிக்கு உருட்டிக் கொண்டே போக வேண்டும் .உச்சிக்கு போனவுடன் அந்த கல்லை அம்போவென விட்டுவிடவேண்டும் .அது உருண்டு உருண்டு கீழே வந்து சேர்ந்தவுடன் மறுபடியும் அக்கல்லை உச்சிக்கு உருட்டி போக வேண்டும் ..உச்சியிலிருந்து மீண்டும் பாறை கிழே உருண்டு வரும் .இப்படியே அவன் தினமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. சிசிபஸுக்கும் பிராந்தனுக்குமான ஒப்புமை ஆராயப்படவேண்டிய ஒன்று. மேலும் பிராந்தனை அன்றைய அரசியல் சமூகப்பின்னனியில் வைத்து இனங்காணவேண்டியதும் அவசியமாகிறது.
கூட்டு வெளியீடு
9159033939
குறிப்பு
கிரேக்க வீரனான சிசிபஸ் மன்னிக்கமுடியாத தவறு செய்தான் என்று குற்றம் சாட்டிய கடவுள் ஒரு சாபமிடுகிறது அந்த சாபம் கிட்டத்தட்ட நமது பிராந்தன் செயலை ஒத்ததாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பிராந்தன் விருப்பப்பட்டு செய்ததை சிசிபஸ் கட்டாயத்தின் பேரில் செய்கிறான். . இதோ அந்த சாபம் ..... சிசிபஸ் தினமும் ஒரு பெரிய உருண்டைக்கல்லை பக்கத்தில் இருக்கும் மலைஉச்சிக்கு உருட்டிக் கொண்டே போக வேண்டும் .உச்சிக்கு போனவுடன் அந்த கல்லை அம்போவென விட்டுவிடவேண்டும் .அது உருண்டு உருண்டு கீழே வந்து சேர்ந்தவுடன் மறுபடியும் அக்கல்லை உச்சிக்கு உருட்டி போக வேண்டும் ..உச்சியிலிருந்து மீண்டும் பாறை கிழே உருண்டு வரும் .இப்படியே அவன் தினமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. சிசிபஸுக்கும் பிராந்தனுக்குமான ஒப்புமை ஆராயப்படவேண்டிய ஒன்று. மேலும் பிராந்தனை அன்றைய அரசியல் சமூகப்பின்னனியில் வைத்து இனங்காணவேண்டியதும் அவசியமாகிறது.
கூட்டு வெளியீடு
முகம் பதிப்பகம் & மாண்டேஜ் ஸ்டுடியோ
கோவை9159033939
Comments
Post a Comment