Skip to main content

Posts

Showing posts from 2016

கல்விக்கொள்கை 2016....... பழங்குடிகள் - சில பரிந்துரைகள்

573 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள் . அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன்பேர்க்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர் இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது
வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச பாலமுருகன் சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்டஇடைவெளியெடுத்துஎந்தவிதஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டுவந்திருக்கிறார் யாரும் அதிகம் தொடாத ,போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப் பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று முதலிரண்டு கதைகளான ஒரு கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை ஈழ அகதிமுகாமுக்குள் விரல்பிடித்து அழைத்துபோய் நிறுத்தி நடுக்கமேற்றுகிறது. எழுத்துலகத்தின் வெளிச்சம் சொற்பமாய்பட்டிருக்கும் முகாம்களின் கோர வாழ்வை அப்பட்டமாகவும் அடிமனதின் வலியோடும் நின்று கதை சொல்லத்தொடங்கும்போதும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தும்போதும் வேதனையில் உறையவைத்துவிடுகிறது  வேர்மண்ணில் தற்காப்புப் பயிற்சி எடுத்த திலகன் காலச்சூழலில் நிர்கதியாக மண்டபம் முகாமில் அகதியாக நிற்பதும் அங்க

யார்ரா அந்தக் கபாலி..... ஹஹஹ வந்துட்டானில்ல

                                                                                                                  கபாலி பார்ட் 1  வடகலையென்றும் தென்கலையென்றும் வைணவத்தில் இரண்டுபிரிவுகள் இருந்ததைப்போலவே சைவத்திற்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமானபிரிவுகள் , இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அது இயல்பான வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல் இன்னும் எளிமையாகச்சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ட்ரா பில்டப்புகள் செய்து கபாலீகத்தை லபக்கென்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது ஆனால் காளமுகத்தால் செரித்துக்கொள்ளமுடியாத ஒரு பிரிவினர் தனித்தே வாழ்ந்தனர். **************** ’         கபாலி பார்ட் 2 கபாலிகள்.. எளிய.மக்கள் .. ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் உறைவிடம் மயானக்காடு. அவர்கள் தானம

வனச்சட்டமும் வங்கொடக்காய்களும்

பழங்குடிகள் காட்டுக்குள் இருக்கலாம் ஆனால் எப்போது வனத்துறை சட்டிய தூக்கசொன்னாலும் தூக்கிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களே ஏதாவது ஒரு கேசைப்போட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் . இது 2005 வரை இருந்த நிலமை. ஆனால் வனச்சட்டம் 2006 வந்த பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஜமீன்தாராக கெட்ட ஆட்டம்போட்ட வனத்துறை ,தனது குண்டாந்தடியை கீழே போடவேண்டியதாயிற்று. ‘’வனச்சட்டம் 2006’’ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? ஆம் என்றுகூட சொல்லலாம். வனச்சட்டம் 2006 பழங்குடிமக்களின் நில உரிமையை உறுதி செய்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஏக்கர்வரை பட்டாப்போட்டு கொடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக்கூறியது கடுக்காய் நெல்லிக்காய் பூச்சைக்காய் புளி போன்ற பொருட்களை அவர்களே எடுத்து அவர்களே விற்பனை செய்துகொள்ளலாம் என்றது வனக் கிராமங்களை தேவைப்பட்டால் வருவாய்க் கிராமங்களாகக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றது யார் யார்க்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை மேலிருந்து யாரும் முடிவு செய்யக்கூடாது பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட கிராமசபையே முடிவு செய்யும் என்றது (இ

நகரத்திலிருந்து எட்டிவிடும்தூரம்தான். January 8 at 2:06am ·

ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம். இங்கே பஞ்சாலைகள்கொடிகட்டிப்பறந்த காலம் இருந்தது  அப்படிப் புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில் 1911ல் ல் ஜின்னிங் பேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் 1922ல் நூற்பாலையாக மாறுகிறது ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும்மிக்க இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்துக்காரர்கள் 15 மணி நேரம் உழைப்புக்கு .. மாத சம்பளம் 15 ரூபாய்.   பஞ்சாலை பாதுகாவலர்கள் சங்கம் என்ற பெயரில்ஆலை முதலாலிகள் வைத்திருந்த ரவுடிகளின் அட்டகாசங்கள் . பெண் தொழிலாளிகளுக்கு பாலியல் சீண்டல்கள், சவுக்கடி, துப்பாக்கிசூடு... இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டு எதிர்த்து சங்கம் கட்டி, துப்பாக்கிகளுக்கு அஞ்சிடாமல் பல்வேறு போராட்டங்களை நெஞ்சுரத்தோடு நடத்தினார்கள் தொழிலாளிகள். ராஜி,இதில் மிகமுக்கியமான பெண் போராளி.. பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக, தனிப்பட்டமுறையில் பெண்களை திரட்டி துணிச்சலோடு அவ்வப்போது மேஸ்த்திரிகளை பொடையெ

கொலை செய்யப்பட்ட சரண்யா, பிரியங்கா, மோனிஷா January 24 at 1:32pm

நான்கு மாதங்களுக்கு முன்பு, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி , SVS கல்லூரியின் மாணவ மாணவிகளை சந்தித்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டது. விரிவான ஒரு கட்டுரையும் எழுதியது. விழுப்புரம் பகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டது. கிட்டத்தட்ட எல்லாவீதிகளிலும் போஸ்டர்களை ஒட்டியது. ஆனால் அப்போது நாம் கண்களை மூடிக்கொண்டோம். நமது குரல்வளையை இடதுகையால் அழுத்திப்பிடித்துகொண்டு வலது கையால் வேறெதையோ பொத்திக்கொண்டோம் . அந்தப்பேட்டியின் சில துளிகள் 1) 2011-ல் கல்லூரியில் சேர்ந்தேன். அரசுக்கட்டணம் 25,000 சேர்த்து மொத்தம் 55,000 கட்ட வேண்டும்” என்றார்கள். “ஏன்” என்று கேட்டதற்கு, “ஹாஸ்டல் பீஸ்” என்றார்கள். “இங்கு ஹாஸ்டலே இல்லை” என்றதற்கு, “ஸ்டடீஸ் மட்டும் தான். இங்கு ஹாஸ்டல் கள்ளக்குறிச்சியில் உள்ளது” என்றார்கள். “சேர முடியாது” என்ற என்னை எனது பெற்றோரிடம் பேசி சேர்த்தார்கள். 2) பொதுவாக பணக்காரர்களுக்கு அட்மிசன் போடுவது இல்லை. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தான் அங்கு சீட் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான். முதலில் ரூ 55,000 என்றார்கள். பிறகு ரூ 1,40,000 கட்டச