Skip to main content

வனச்சட்டமும் வங்கொடக்காய்களும்

பழங்குடிகள் காட்டுக்குள் இருக்கலாம் ஆனால் எப்போது வனத்துறை சட்டிய தூக்கசொன்னாலும் தூக்கிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களே ஏதாவது ஒரு கேசைப்போட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் .
இது 2005 வரை இருந்த நிலமை. ஆனால் வனச்சட்டம் 2006 வந்த பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஜமீன்தாராக கெட்ட ஆட்டம்போட்ட வனத்துறை ,தனது குண்டாந்தடியை கீழே போடவேண்டியதாயிற்று.
‘’வனச்சட்டம் 2006’’ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
ஆம் என்றுகூட சொல்லலாம்.
வனச்சட்டம் 2006 பழங்குடிமக்களின் நில உரிமையை உறுதி செய்தது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஏக்கர்வரை பட்டாப்போட்டு கொடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக்கூறியது
கடுக்காய் நெல்லிக்காய் பூச்சைக்காய் புளி போன்ற பொருட்களை அவர்களே எடுத்து அவர்களே விற்பனை செய்துகொள்ளலாம் என்றது
வனக் கிராமங்களை தேவைப்பட்டால் வருவாய்க் கிராமங்களாகக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றது
யார் யார்க்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை மேலிருந்து யாரும் முடிவு செய்யக்கூடாது பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட கிராமசபையே முடிவு செய்யும் என்றது (இங்கே கிராமசபையென்பது நமது பஞ்சாய்த்தின் கிராமசபை அல்ல)
யார் உள்ளே வரவேண்டும் யார் வெளியே போகவேண்டும் என்று பேசும் சொல்லும் செயல்படும் அதிகாரம் அந்த மக்களுக்கே உள்ளது என்றது
அது காட்டின் சாவியை திரும்பவும் பழங்குடிகளிடமே தரவேண்டும் என்றது
இதை அமுல்படுத்துவார்களா? அசையவே இல்லை
இந்த சட்டத்தை அமுலபடுத்தவேண்டும் என்று இங்கேயும் செயல்பாட்டாளர்களால் பல கவனஈர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டன. அரங்கக்கூட்டங்கள் நடந்தன. இடதுசாரி அமைப்புகள் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினார்கள்.
ஆங்காங்கே தன்னிச்சையாக பல குழுக்கள், உரிமைக்குழுஅமைத்தல் விண்ணப்பம் பெறுதல் சட்டம் பற்றிய விளக்ககூட்டம் நடத்தல் என பம்பரமாக சுழலத்தொடங்கியது.
வேலைகள் வேகமாக நடந்துவந்ததை பெருமூச்சுடன் பார்த்த ஒரு கூட்டம் நம்பியாரைப்போல் கைகளை பிசைந்து நின்றது. எப்படியாவது குலைக்கவேண்டும் என்று, நண்டுக்கு காயம்பட்டால்கூட நாண்டுகிட்டு சாகப்போகும் போலி சூழல் வாதிகளோடு சேர்ந்து அற்பத்தனாமாக ஒரு காரியத்தில் இறங்கியது .
,
கார்ப்ரேட்டுகளை பின்பலத்தில் வைத்துக்கொண்டு ரிட்டையர்டு வனஅதிகாரிகள் ‘இச்சட்டத்தால் காடு அழிந்துபோவதற்க்கு வாய்ப்பிருக்கிறது ஆகவே இதை நிறுத்திவைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுபோட்டார்கள்

''நிறுத்திவைக்கலாம்... நிலங்களை அளப்பதற்க்கும் அத்ற்கான ஆவணங்களை தயார் செய்வதற்க்கும் எந்த தடையும்போடமுடியாது ஆனால் கோர்ட் அனுமதியின்றி பட்டா வழங்குவதை தடை செய்கிறோம்'' என்று ஒரு ஆணையை வழங்கியது
இதுபோதுமே இவர்களுக்கு.....
இச்சட்டத்துக்கு தடை பெற்றுவிட்டோம் என்று மாவட்ட வன அலுவலகம் முதல் , சரக அலுவலகம் வரை தண்டோரா போட்டார்கள். ஊர் ஊராகப் போய் குய்யோமுறையோ என்று கத்த ஆரம்பித்தார்கள். ரிசாட்டுகளில் தண்ணியடித்து How to Preserve spider என்று லெக்சர்கள் எடுத்தார்கள். அழுகிபோன சில ஆவணப்படங்களை ஊர் ஊராக சுமந்துபோய் விற்க்க ஆரம்பித்தார்கள் . லாலிபாப்பெல்லாம் வாங்கிக்கொடுத்து லாபிசெய்ய ஆரம்பித்தார்கள்
ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்த நமது மாநில அதிகாரிகளுக்கு இந்த பேச்சு ஒரு சாக்காகிப்போனது. இதற்காகவே காத்திருந்ததுபோல் கிட்டத்தட்ட எல்லா வேலையையும் அப்ரப்டாக கிடப்பில் போட்டுவிட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விட்டார்கள்
வனஉரிமைக்குழுவை அமைத்து நிலங்களை அளந்து பக்கத்து மாநிலங்கள் பட்டா கொடுக்கும்விழாக்களை நடத்திக்கொண்டிருந்தபோது நம் அரசு ஒரு சின்ன துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை
செயல்பாட்டாளர்கள் கரடிபோல கத்திப்பார்த்தார்கள். கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்கூட பரவாயில்லை... கத்தியவர்களின் வீட்டுக்கேபோய் மாவோயிஸ்டுகளுக்கு மயில்மார்க் சம்பாரவை வாங்கிக்கொடுத்தீர்களா என்று போலிசார்களை வைத்து செல்லமாக விசாரிக்கவைத்தார்கள். 
.
கடந்துபோன காங்கிரஸ் அரசின் செயலகம் எல்லா மாநிலங்களுக்கும் அறிவுறுத்துக்கடிதம்கூட அனுப்பியது. ஆனால் நம் மாநிலம் அதை பள்ளிகரணைக்கு பக்கத்தில் உள்ள குப்பைமேட்டில் போட்டுவிட்டு மாவரைக்கபோய்விட்டது.

அமுல்படுத்த உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று குடைந்து குடைந்து கேட்டவர்களின் அலுவலகங்களுக்கு ஆட்களை அனுப்பி ...அவர்கள் ஏன் நக்சலைட்டுகளாக இருக்ககூடாது என்று அகழ்வாராய்சி செய்து அந்த அகழ்வாராய்ச்சிக்குறிப்புகளை போஸ்டரடித்து ஒட்டினார்கள்
ஆனால் இப்போது
தனது கொண்டைய மறைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த உச்சநீதிமன்றம் " எங்கள் அனுமதியில்லாமல் பட்டா வழங்கக்கூடாது" என்ற உயர் நீதிமன்றத்தின் ஆணையின் மீதும், இந்த அடாவடிகளின்மீதும் ஒரு ஆப்பை செருகியிருக்கிறது

இந்த ஆப்பை இன்னும் ஆழமாக அடித்து அதை பிடுங்கமுடியாத மாதிரி ஆக்குவதும்,கடைகோடி வரை சலிப்பில்லாமல் இச்சட்டத்தின் பயனை கொண்டுபோவதும் ஒடுக்கப்படும் மக்களின்பால் அக்கறைகொண்டுள்ள அரசியல் இயக்கங்களின் கையில்தான் உள்ளது
பல்வேறு சட்டங்களை அலசி, இந்த வனச்சட்டத்தை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்த பிஜாய் C.R Bijoyபோன்ற செயல்பாட்டாளர்களும், நினைத்தால் அசைத்துவிடக்கூடிய இடத்தில் இருந்த காங்கிரஸை அசைத்து, இந்த சட்டத்தை அமுல்படுத்தப் போராடிய இடதுசாரிகளும். பல்வேறு அவதாரம் எடுத்துவந்து இச்சட்டத்தை சிதைக்க பி ஜே பி நினைத்தபோதெல்லாம் வெகுண்டெழுந்து, தனது குறைந்தபட்ச பலத்தைவைத்துகொண்டு போராடிய சின்ன சின்ன ஆதிவாசி இயக்கங்களும் அவர்களின் தோளோடு தோள்நின்ற பொதுவுடமை இயக்கங்களும் என்றென்றைக்கும் நன்றிக்குறியவர்கள்.https://www.facebook.com/odiyen/posts/10154069982316807

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக