Skip to main content

யார்ரா அந்தக் கபாலி..... ஹஹஹ வந்துட்டானில்ல

                                                          
                                                       கபாலி பார்ட் 1 



வடகலையென்றும் தென்கலையென்றும் வைணவத்தில் இரண்டுபிரிவுகள் இருந்ததைப்போலவே
சைவத்திற்குள்
1 வார்மம்,
2 பாசுபதம்,
3 காளாமுகம்,
4 பைரவம்
5 மாவிரதம்,
6 கபாலிகம்,
என ஆறு உட்பிரிவுகள் இருந்தது
ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமானபிரிவுகள் ,
இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
அது இயல்பான வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல்
இன்னும் எளிமையாகச்சொன்னால்
தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை
ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ட்ரா பில்டப்புகள் செய்து கபாலீகத்தை லபக்கென்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது ஆனால் காளமுகத்தால் செரித்துக்கொள்ளமுடியாத ஒரு பிரிவினர் தனித்தே வாழ்ந்தனர்.


****************
      
கபாலி பார்ட் 2


கபாலிகள்.. எளிய.மக்கள் .. ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் உறைவிடம் மயானக்காடு. அவர்கள் தானம் வாங்கி உண்ண பயன்படுத்திய பாத்திரம் மண்டை ஓடு’
முக்தியடைய அவர்கள் கடைபிடித்த பஞ்சமகரம் என்னும் தாந்தீரிகம் சாதாரணமனிதர்களின் அன்றாட நடவடிக்கைதான்.
1 மாத்யம் (கள்ளு)
2 மைதுனம்(போகம்)
3 மைச்சியம்( மீன்)
4 மாம்ஸம் (கறி)
5 மதுரம்

                                                           **********************

                                                       கபாலி பார்ட் 3
கபாலிகத்தையும் புத்தத் துறவிகளையும் கேவலமாய்க் கலாய்க்கும் சமஸ்கிருத நாடகம்மத்தவிலாசம்.
இது அந்தணர்களுக்கு பல்லக்கு தூக்கிய பல்லவ அரசனால் எழுதப்பட்டது
நாடகம் இப்படித்தொடங்குகிறது
சத்யசோமன் என்னும் கபாலி, தன் மனைவி தேவசோமாவோடு சரக்கடிக்கப்போகிறார்
அங்கே அவர்கள் கையில் வைத்திருந்த உணவு உன்ணப்பயன்படுத்தும் திருவோடு( மண்டையோடு) காணாமல் போகிறது.
அதைத்தேடு தேடென்று தேடுகிறார்கள் ஆனால் அது கிடைத்தபாடில்லை
தொலைந்துபோகும்போது அந்த மண்டையோட்டில் கொஞ்சம் மாமிசம் இருந்திருக்கிறது அதனால் அதை நாயோ அல்லது ஒரு புத்த துறவியோதான் எடுத்திருக்கவேண்டும் என சத்தியசோமன் எண்ணுகிறான்.
எதிரே வந்த புத்த துறவியிடம்சத்திய சோமன் வம்பிழுக்கிறான்
பாசுபதன் என்னும் இன்னொரு துறவி இருவரையும் விலக்கிவிட்டு நாட்டாண்மை செய்கிறான்
நடுநிலைநக்கி பசுபதன் போட்ட மொக்கையில் மண்டைகாய்ந்த புத்த துறவி தொல்லை தொலையட்டும் என்று தனது சொந்த திருவோட்டைசத்தியசோமனிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்
அந்த நேரம்பார்த்து ஒரு நாய் திருடு போனதாய் சொல்லப்பட்ட கபாலத்தைக் கவ்விக்கொண்டுபோகிறது அதை ஒரு பைத்தியகாரன் பிடுங்கிக்கொள்கிறான்
பைத்தியகாரனிடம் பிடுங்கப்பட்ட கபாலஓடு இறுதியில் சத்திய சோமனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இங்கே எண்ட் கார்டு போட்டுவிடுகிறான் முதலாம் ம்கேந்திரவர்ம பல்லவன்

மூன்று பார்ட்டையும்  கூட்டி கழிச்சு பெருக்கி வகுத்தா இந்த கபாலிகள் யார்ன்னு புரிஞ்சுக்கலாம்.

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக