Skip to main content

கும்கி …


         னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது


 ஆனைகட்டியில்,தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,  சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து  எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும்வட்டங்களும் சதுரங்களும்  ஏற்றிவிட்ட  பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்  சீட் போட்டா....... அந்த அரசியல்  மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது

ஏன் கும்கி வருகிறது என்பதில்  நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது   உறுத்தலாகத்தான் இருக்கிறது. 

அப்பன்  மல்லூரியை  ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .  ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ   உணர்வுமொழியோ  அவருக்கு    கைகூடி வந்ததாக தெரியவில்லை ,பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமுன்னால் நிற்க்கிறபோதும் நடக்கறபோதும்  மற்றவர்களின்   நடவடிக்கைகள்   மல்லூரியை கெட்டிதட்டிப்போன லோக்கல் பஞ்சாயத்து தலைவராக்கிவிடுகிறது. அவருடைய வீடுடென்று காட்டப்படும் இடம், அநேகமாக  சூட்டிங் ஆட்கள் தங்குவதற்காக போடப்பட்ட செட்டாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும்  அவரின் வீடாக முடியாது.  கூட சிலம்பம் சுழல்வதும் பறையுயொலிப்பதும் இன்னும் அந்நியப்படுத்திவிடுகிறது.

பழங்குடிகளைபொறுத்தவரை மூப்பனுக்கோ வண்டாரிக்கோ மரியாதை என்பது  சடங்குகளின்போதுமட்டுமே,  மற்றநேரம் அவனுக்கும் ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது  சொல்லப்போனால் பெரும்பாலான நேரங்களில் அவன் வெறும் சிக்குமாதாதான்    

பலர் சொல்வதுபோல் அந்த அறுவடைநடனம்கூட பழங்குடிகளுடையது அல்ல, ஆனால் அது அவர்களின் ஒரு கால்வைப்பில்தான்தொடங்குகிறது பிறகு  வெகு சில விநாடிகளில்  ஒரு சாதரண ரெக்கார்டு டேன்ஸாக அதுவும் மாறிப்போய்விடுகிறது 
அப்புறம் காட்டையழிக்கும் பன்றியை கொல்ல மூன்று இளைஞர்கள் கம்பையும் வேலையும் தூக்கிக்கொண்டு ஓடுவது சிரிப்பையே வரவழைக்கிறது  சற்றேசில ஆண்டுகளுக்குமுன்வரை, இப்போது கூட  பழங்குடிகள்,  ’’யானை தின்னதுபோக பண்ணி தின்னதுபோக  கண்டவர் தின்னதுபோக  காடை தின்னதுபோக  எனக்கும் கொஞ்சம் கொடு கடவுளே’’ என்றுசொல்லித்தான் விதைபோடத்தொடங்குவார்கள்  அப்படியே மேய்ந்தாலும் அவர்கள் இருக்கும்போதுதான் விரட்டுவார்களே அல்லாமல் ஒரு கிலோமீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து  கொல்வது அவர்களின் பண்பல்ல யுவர் சமூகசெயல்பாட்டாளர்

அப்புறம்..., கொல்வது என்பது  வேறு, விரட்டுவது என்பது  வேறு, எப்போது கொல்லவேண்டும் எப்போது விரட்டவேண்டும் என்பதற்கு அவர்களிடத்தில் ஒரு கணக்கு இருக்கிறது  சாலமன் 

 ’’திந்தா திந்துட்டுபோகுது ராஜா, அச்சா பெல்லா வகுத்துக்குக்கு அது ஏங்க போகும்’’. முயல்வந்தால் கூட குலைக்கிற, துரத்துகிற அவர்களின் நாய்கள்  அருகாமையில்  யானைவந்தால் அமைதியாக  இருந்துவிட பழகியிருக்கிறது. யானை தனது காட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தால்   ’’போனாவருசமும் எம்க்கு ஒந்தும்ங்கெடாய்கல இந்த வருசமாவது நேம் பொழைக்கே.... சாமி போயிறு’’ என்று அது இருக்கும் திசையில் குனிந்து மண்ணை தொட்டு எழுந்து  வணங்குவதை  அவர்கள் இன்னும் கடைபிடித்துத்தான் வருகிறார்கள்.   அவர்களுக்கும் அதற்க்கும் நடக்கும் சண்டையானது வெறும் உள்முரண்பாடுதான்.  பல நேரம் அவைகள் இவர்களோடு  விளையாட்டாக செயல்படுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன் ஆனால்  உங்களின் படம் காட்டு யானைகளை கொடூரமான வில்லனாக பார்க்கவைப்பதில் வெற்றிபெற்றுவிடுகிறது
 
 


காட்டானை யாரையாவது அடித்துவிட்டால் அது கிடு கிடுவென நடுங்க ஆரம்பித்துவிடும்  .மேலும் அது ஒரு ஆளை அடித்துவிட்டு, அடித்த இடத்திலேயே ஒருபோதும்  நிற்காது. அதானால் அப்படி நிற்கவும் முடியாது. இங்கோ   ஒரே நேரத்தில் 5 பேரை சதக் சதக் என்று போட்டுத்தள்ளிவிட்டு மேனனையும் துரத்துவது அது  ஏதோ தமிழ் ’ஏக்சன்’ படம் பார்த்துவிட்டு நேராக காட்டுக்குள் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

யானை ஒருவரை தாக்குவது என்பது அதற்கு இருக்கிற பயத்தினால்தானே ஒழிய, அது தன்னை பெரிய தாதாவாக நினைத்துக்கொள்வதால் அல்ல....


இந்த சம்பவத்தை  உங்களுக்கு கட்டாயமாக சொல்லியே ஆகவேண்டும்

மேற்குதொடர்சிமலையில் அட்டப்பாடிக்கு அருகில்  கல்மொக்கே என்றொரு பழங்குடியின் பதியிருக்கிறது  அங்கே   நாகன்  என்ற இருளர்னது கூரையில்  இரண்டு வாழைமரக்கன்று வைத்து வளர்த்துவந்தார். அது இரண்டும்  குலைவிட்டிருந்தது.    வனத்துக்கும் அவர் வீட்டுக்கும் ஒரு கிலோமீட்டர்தான் இருக்கும். ஒரு நாள் மதியம் மூன்று மணியிருக்கும் பதினாறு வயதான ஒரு காட்டனை    அருகில் இருந்த வனத்திலிருந்து எட்டிப்பார்த்தது. அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு யானையும் வந்து அதனோடு சேர்ந்துகொண்டது.  
  
அவர் கூப்பிட்டுகாட்டினார் ’பாத்துட்டே இருங்க அவனுக ரெண்டுபேரும் எங்கூட  வெளையாடறத….இப்ப நான் மறஞ்சுக்கறேன் என்ன பண்றான்னு மட்டும் பாருங்க’

அவர் கூரை மறைவில் போய் நின்றுகொண்டார்

 ஒரு யானைமட்டும் அங்கிருந்து  வேகமாக வாழைமரத்தை  நோக்கி வரத்தொடங்கியது

நாகன்,மாட்டை பிடிப்பதுபோல் வீட்டிலிருந்து வெளியேறி வாழைமரத்தை தாண்டிப்போனார்.வந்த யானை அப்படியே நின்று அவரை பார்த்துவிட்டு, தலையை ஆட்டி ஆட்டி.தன் திசையை மாற்றிக்கொண்டு மேய்வது போல் நடித்தது....

 அவர் மாடு கட்டிய இடத்தை விட்டு கூரைக்குள் வந்துநின்றுகொண்டார்

திரும்பிப்பார்த்தது…  நாகனைகாணோம்..... மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக வரத்தொடங்கியாயிற்று

திரும்பவும் அவர் இறங்கி  ஆட்டுக்குதழைகொடுக்கபோவதுபோல்  வாழைமரத்தை கடந்துபோனார்

ஏர் பிரேக் போட்டதுபோல் சறுக்கி நின்றது யானை. 

திரும்பவும் வீட்டுக்குள் போனார்

குறுகுறுவென்று பார்த்தது.  யாரும் இல்லை நகனையும் வெளியே காணோம் அவன் வருவதற்கான அறிகுறிகள் இல்லை ஆனாலும் வந்துவிட்டால்...... ’வருவதற்க்குள் அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிரனும்’

அவ்வளவுதான் ...குடுகுடுவென  ஓட்டமாக வந்து ஒரே ஒரு தாரை மட்டும் பிடிங்கிக்கொண்டு சவாரியெடுத்தது..... பாதி தூரம் போய்  வாழைத்தாரை கீழே வைத்துவிட்டு திரும்பிப்பார்த்தது......,மெல்லமாய் நாகன்  வெளியே வந்து எட்டிப்பார்த்தார்

அவர்முகத்தை கண்டதும் மறுபடியும் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு தலை தெரிக்கஓடி வனத்துக்கு அருகில்போய் நின்றுகொண்டு திரும்பிப்பார்த்தது

’’பயத்தப்பாரு …..போ போ அது உனக்குன்னுதா விட்டிருந்தே’’ நாகன்  குலுங்கிக்குலுங்கி சிரித்தார் அவரின்  அட்டகாசமான சிரிப்பில், என்னால் சகோதரத்துவத்தைதான் பார்க்கமுடிந்தது
இப்படியான விளையாட்டை  நீங்களும் நானும்,  ஒருக்காலும் நிகழ்த்தமுடியாது..... யானையோடு மட்டுமல்ல இன்னபிற விலங்குகளோடும் காட்டோடுமான   அவர்களின் உறவு உயிரோட்டமானது.
 




 கும்கியை அழைப்பதென்பது அவர்களிடத்தில் ஒருநாளும் நடந்ததில்லை...  அரசாங்கம் அனுப்ப எத்தனித்த கும்கியை முகாமுக்கே திருப்பியனுப்பிய  ஆதிவாசிகளை நான் அறிந்திருக்கிறேன். அந்த  வல்லமைதான் அவர்களின்  வலிமை சாலமன்

கடைசி சீனில் கொம்பன். மலையிடுக்குகளில் மாணிக்கத்தால்(கும்கி) முட்டி தள்ளிவிட்டபின்  பழங்குடிகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழும்புவதாக காட்டியிருக்கிறீர்கள். ஆனால் உண்மை அப்படியானதாக ஒருபோதும் இருந்திருக்கமுடியாதுசாலமன்..அதற்குப் பதிலாக அவர்கள்  கொம்பனுக்காக கண்ணீர்தான் வடித்திருப்பார்கள் . தன் சொந்த மகன் கொம்பனால் மிதிபட்டு இறந்தபோதுகூட கண்ணீர் விடாத இருளர்கள்   அதே கொம்பன்   உயரழுத்த மின் வேலியில்  சிக்கி இறந்தபோது சகலமரியாதையும் செய்து  கண்ணீர் வெள்ளத்தில்தான் அடக்கம் செய்தார்கள் சாலமன்
தனது தோட்டத்தை மேய்ந்த யானைகளை கொல்ல, குடியேறியவர்கள் வழக்கமாக கரும்புச்சாறில் யூரியா போட்டுவைப்பார்கள். நீர் தேடி வரும் யானைகள்  அவற்றைக்குடித்து குடல் வெந்து  செத்துப்போய்விடும்..   குடியேறிகளின் இந்த வக்கிரம் அவர்களிடத்தில் கொஞ்சமும் இல்லை சாலமன்.

சாலமன்...., அவர்களின் பண்பாடுகள், ஆழமான..... அருவியைவிடவும் உயரமான மலைகளை..... விடவும் அகலமான காடுகளைவிடவும் மேலானது.

வானளாவிய அதிகாரம் படைத்த வனத்துறையின் அத்துமீறல்கள்  சொற்ப இடங்களில் மின்னலாக வந்துபோய்விடுகிறது  காட்டுக்குள்ளேயே களமிருக்கும்போது அப்படியானதா அந்த அதிகாரம்.

’’மூன்று தலைமுறையாக வனத்துக்குள் இருக்கின்ற பழங்குடிகளுக்கும் வனம்சார்ந்த பிற குடிகளுக்கும்  பட்டாவை கொடுத்துவிடு இனியும் அவர்களை வஞ்சிக்காதே’’ என்று காலரைப் பிடித்து உலுக்கும்  2006 வனச்சட்டத்தை  கண்டதுண்டமாக்க,  புலிகள் காப்பகங்களை கையிலெடுத்து தாண்டவமாடும் அதிகாரிகளுக்கும்,  அக்மார்க் கன்சர்வேசனிஸ்டுகளுக்கும் எதிராக   ஏதாவது ஒரு இடத்தில் சாட்டைவேண்டாம், லஷ்மி மேனனின் அந்த ’அடையாளச் ஜடை’யாவது சுழன்றிருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும். 
கடைசியாய் ஒன்று, அகமணமுறைக்கு  இருக்கிற  பாராம்பரியதைவிட காதலுக்கு அவர்களிடத்தில் கூடுதல் பாராம்பரியமிருக்கிறது சாலமன்

கும்கியாக வெற்றிபெற்று கொம்பனாக தோல்வியுற்றிருக்கும் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லமுடியும்              

கொம்பன் குமுளியில்  இருந்தாலும் கொத்தல்லி சோளகர்தொட்டியை காட்டிக்கொடுத்துவிடுகிறான் .

கொசுறு : 
ரத்தசோகையில்லாத   ஒரே பழங்குடிப்பெண்ணாக இந்தியாவில் லட்சுமி மேனன்  மட்டுமே மிளிர முடியும்.....   மிளிரட்டும் விட்டுவிடலாம் 
மீட்டர் கொடுத்த  இமானையையும்..விட்டுவிடலாம்,
நீங்களாவது பாடல்களில் பழங்குடிகளின் ஸ்லேங் களை பயன்படுத்தியிருக்கலாம்யுகபாரதி....

Comments

  1. அருமையான பதிவு. "மலைவாழ் மக்கள் இயற்ககையின் குழந்தைகள்". யானைகளுக்கும் அம்மக்களுக்கும் உள்ள அன்பை விளக்கியது அற்புதம். படத்தில் பழங்குடியினர் பற்றிய பண்பாடு சற்று எதிர்மரையாக இருப்பது எமாற்றத்தை அழிக்கிறது. எமாற்றத்தை ஒப்புகொண்டால் தான் படம் பார்க்க முடியும். மொத்ததீல் சிறப்பான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. புவன் தர்சனி, முடுகர் பழங்குடிகளிடம் ஆய்வு மேற்கொண்டிருக்கிற தங்களின் பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது, மேலும் இந்த பதிவுக்கு மதிப்பையும், நம்பிக்கையயும் கூட்டுகிறது மிக்க நன்றி

      Delete
  2. நன்றிகள் பல உரித்தாகுக! நல்லதொரு திறனாய்வு.

    ReplyDelete
  3. When will our filmmakers learn to respect the cultures of our Aborigines??? Someone should file defamation case against Prabhu Solomon team for bringing wrong facts about aborigines in his movie.

    These aborigines are real natives of this land, we got to spread their true values instead of the rumours about them. Shame on Kumki team...

    ReplyDelete
    Replies
    1. விவேக் ..பல்வேறுபட்ட மோசமான போக்குகளும் கதைக்களங்களும் நிறைந்த திரையுலகில், கும்கிக்காக அவ்வளவு தீவிரமாக போகவேண்டுமா என்ன? காதுகளை திறந்துவைத்துள்ள இதயமுள்ள நண்பர்களைமட்டுமே விமர்சிக்கமுடிகிற சூழலில் இருக்கிறோம் .... சாலமன் அப்படியாகப்பட்ட நண்பராகவே தெரிகிறார் .......

      Delete
  4. Excellent review by Odiyan!!! I was expecting what odiyan would be saying about the movie, when I was watching it.

    ReplyDelete
  5. "சாலமன்...., அவர்களின் பண்பாடுகள், ஆழமான..... அருவியைவிடவும் உயரமான மலைகளை..... விடவும் அகலமான காடுகளைவிடவும் மேலானது."

    ஆயிர சதம் உண்மை.

    ReplyDelete
  6. இது நாளி இல்ல தல...

    ReplyDelete
    Replies
    1. இது நாளி இல்லைதான் ..ஆனால்...... ஆதிவாசிகள் குறித்த பிழையான பார்வை, பொது அரங்குக்கு வரும்போது, ஏதாவது ஒரு வகையில் எதிர்வினையாற்றவேண்டிய கடமை அவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிற ஒருவருக்குசின்ன அளவிலேனும் இருக்கவேண்டியது அவசியம் என நினைக்கிறேன் கார்த்திக்

      Delete
  7. wwoooowwwww. superrrrrrrrrrrrrrrrrrrrr.. I didnt watch the movei.. but ur post is excellent....

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் திரையரங்கில் சென்று பாருங்கள்

      Delete
  8. நல்லதொரு விமர்சனம். நன்றி ஒடியன் & சென்ஷி

    ReplyDelete
  9. விக்ரமன்December 20, 2012 at 12:18 AM

    review நன்றாக உள்ளது..ஏன் தோழர் ஒடியன் என்று பேர் வச்சிருக்கீங்க?

    ReplyDelete
  10. உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது, தோடர்ந்து எழுதுங்கள் தோழர்.

    வாழ்த்துக்களுடன்
    கை.அறிவழகன்

    ReplyDelete
  11. UNGAL EZHUTHIRKKU ENGAL VAZHUKKAL

    ReplyDelete
  12. அருமையான பதிவு .

    சூழ்ச்சிகள் நிறைந்த கொடும் மிருகங்கள் வாழும் நாட்டில் இருக்கிற என்னை போன்றோருக்கு , கொம்பனை பற்றியும் ஆதி குடிகளின் வாழ்க்கை முறை அவர்களுக்கு வன உயிர்களுக்குமான அன்பு தோய்ந்த உறவை பற்றியும் எதுவும் தெரியாது .எங்களுக்கு தெரிந்ததெல்லாம் வயிற்றுக்கு வாழ்வது . அதன் பொருட்டு வெட்கமே இல்லாமல் எதையும் செய்வோம் . இப்படி பட்ட எங்களுக்கு தான் வாழ தன் இனத்தை அழிக்கத் தெரியாத மிருகங்களை பற்றியோ , பலாத்காரமாய் வன்புணர தெரியாத வன மிருகங்களை பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை . அப்படிப்பட்ட மக்களுக்கு படமெடுக்கும்போது குறைந்த பட்சம் உண்மைகளை சொல்லவேண்டும் என்றாவது பொறுப்புணர்ச்சி இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும் . முதலில் கும்கி திரைப்படத்தை பார்த்த பொழுது "அட அருமையாக எடுத்திருக்கிறார் சாலமன் ".. என்றே சிலாகித்தேன் . ( அவ்வளவு தான் என் சிற்றறிவின் ரசனை ) . கொம்பன் என்றால் கொடும் எமன் என்றே எண்ணிவிட்டேன் .

    ஆனால் மிகச்சரியான நேரத்தில் உங்களின் பதிவை கண்ணுற்றேன் . ஆதிகுடிகளின் சில முகத்தை நீங்க சொன்ன விதம் அவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலை தூண்டுகிறது . வனவிலங்குகள் ஆதிகுடிகளோடு இணக்கமாக பழகுகிற வாழ்வியலையும் ஆதிகுடிகளின் வாழ்வியலையும் தொடர்ந்து எழுதி எங்களின் ஆவலுக்கு தீனி போடுங்கள் ஒடியன் .

    நல்ல எழுத்து நடை . நிரம்ப பாராட்டுகிறேன் . வாழ்த்துக்கள்

    ~~க.உதயகுமார்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி உதயா, பழங்குடிகளின் மேல் அக்கறையுள்ள சாலமன் போன்ற இயக்குநர்கள்அங்கே செல்விடும் சொற்பநாட்களில் என்ன புரிந்துகொள்கிறார்களோ அவற்றை பொதுமைப்படுத்திவிடுகிறார்கள் மேலும் அதிக செய்திகளுக்கு அவர் அருகில் உள்ள தகவலாளர்களை பெரிதும் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது அவர்கள் இழைக்கும் சின்ன தவறுகள் வேறுமாதிரியான உருவத்தை எடுத்துவிடுகிறது அவர் கவனம் குவிக்கவேண்டிய பகுதிகளைமட்டும் சுட்டியிருக்கிறேன் எனக்குள்ளே வைத்த உங்களது வேண்டுகோள் மகிழ்வளிக்கிறது.. தொடர்ந்து சந்திப்போம்

      Delete
  13. I know this writer personally professionally over the last half decade...his contribution towards tribal living is unparalleled...he is author of "Naali" documentary describing the greatness of tribals, and written several books and articles on tribal lives...he did PhD research on tribal living....

    In that sense the credibility of the writer is just command-able....some of the facts about Karunya college and other encroached areas are really true....i wish someone will shoot some great movie and bring visibility about the real issue,....heart breaking to see the leveling work carried out by "developed civilized community" on the moutains using big poclain machines....to level the moutains and built resorts, protecting it with high voltage fences....where the animals will go for water and to roam around, while we completely encroached their territory?

    we call ourself as civilised, and trying to own land by the name of documents/patta, though we know that we wont own carry anything when we die....the tribals and forest animals will be laughing on us when they see our crazy backward mentality and poor life style....

    they r truly brilliant and nature protectors.....we so called urban civilians are supposed to be projected as villains....not those animals or tribals....

    Well done Lakshman for this great writing....


    ReplyDelete
    Replies
    1. Kannan, thank you for your Comment. I agree with u, except first paragraph
      1 My research is not for Phd
      2 'Naali' is an outcome of a team work , Murugavel is there,

      Delete
  14. மிகச் சிறந்த பதிவு. தங்களின் அக்கறைக்கும் ஆற்றலுக்கும் நன்றி. நிச்சயம் சாலமன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். உண்மையை திரித்து சொல்வதற்கு அதனை சொல்லாமலேயே விட்டிருக்கலாம். நன்றி சகோ. (சிறு கோரிக்கை: பின்னுட்டத்துக்கு வைத்திருக்கும் word verificationஐ எடுத்துவிடலாமே. பின்னுட்டமிடுவது இன்னும் சுலபமாக இருக்கும்.)

    ReplyDelete
    Replies

    1. வலைப்பூ குறித்த எனது அறிவு அவ்வளவுதான் , இதோ எடுத்துவிட முயற்சிக்கிறேன் நன்றி ஜானகிராமன்

      Delete
  15. அற்புதமான விமர்சனம் லக்ஷ்மன்... நன்றிகள்..

    ReplyDelete
  16. சிறு அளவு கூட ஹோம்வொர்க் என்பது நம் இயக்குனர்களிடம் கிடையாது........வனங்க‌ளுக்கோ , வன விலங்குகளுக்கோ ஆதிவாசிகளால் எந்த ஆபத்தும் இல்லை......அவர்களை காண செல்லும் சுற்றுலாவாசிகளாலும், வனத்துறையினராலும்தான் ஆபத்து..... இந்த எளிய உண்மையைக்கூட புரிந்து கொள்ளாத இவர்கள் எல்லாம் வன விலங்குளை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்?

    ReplyDelete
  17. Mr Odiyenn, film making is a business. It is not Phd paper. The details you have mentioned are good for research. But, will it help the director a make a good and commercially successful movie?

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக்கொள்ளும் கதைக்களத்தின் பின்னனி குறித்தான, குறைந்தபட்ச ஆய்வு நிச்சயம் அடிப்படையானது . அது சாலமனிடமிடமும் இருக்கிறது.
      ஆய்வு என்பது, பல்கலைகழகங்களில் பட்டங்களுக்காக செய்யப்படுவது என்ற வரையறைக்குள் நின்று பேசுவதானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் ? ஆனால் ஆய்வு என்பது அதுமட்டுமல்லவே சத்யா!
      முற்றிலும் உண்மையில்லை என்றாலும்கூட, கொம்பன் இறங்குவானா? மாட்டானா?... என்பதை முற்றிய கருதை பிசுக்கிப்பார்த்து சொல்லுகிற காட்சி ஒன்று படத்தில் வரும் , இதுவும்கூட ஒரு ஆய்வுதான்
      ‘’பார்கே பார்கே’’ என்று சொன்னால் கும்கி முன்னால் நகரும் என்பதுகூட ஒரு ஆய்வுதான் , இப்படி நிறைய படத்தில் சொல்லமுடியும்
      ‘’கும்கி’’ வரும் வரைக்கும் ஆய்வேட்டிலும், மக்களிடமும் இருந்துவந்த 'வேல்யூஏடேட்' சரக்குகள்தான் மேலே குறிப்பிட்டுள்ளவைகள்.

      இந்தமாதிரி சின்ன சின்ன ஆய்வுகளின் பயன்பாடுதான் கும்கியை ‘’சக்சஸ்புல் மூவி’’யாக்க உதவியிருக்கிறது

      Delete
  18. நான் கும்கி திரைப்படம் பார்க்கவில்லை. உங்கள் கருத்தை படித்து இதை எழுதுகிறேன்.

    யானைகள் வாழைமரத்தின் மத்தியில் உள்ள தண்டை மிகவும் விரும்பி சாப்பிடும். இதை நான் கண்ணால் பார்த்தது உண்டு. நீங்கள் எழுதியது போல வாழைத்தாரை சாப்பிட்டது என்பது என்னால் நம்பமுடியவில்லை.

    எனக்கு தெரிந்தது பழங்குடியினர் எல்லோரும் பாரம்பரிய விவசாயிகள் அல்ல, மற்றும் வாழையும் அவர்களது பாரம்பரிய பயிர் அல்ல என்பதே.

    எனது தாத்தா பாட்டிக்கு தெரியும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்கு தெரியவாய்ப்பில்லை. எனக்கு தெரிந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் எனது தாத்தா பாட்டிக்கு தெரியாது. ஆகவே, மனிதர்களின் பரிணாம மாற்றத்தை அல்லது பரிணாம இடைவெளியை கண்டு வியப்படைகிறோமோ என தோன்றுகிறது.

    மாறும் மனிதனோடு சேர்ந்து வாழ முடியாத மற்ற உயிர்கள் எல்லாம் அழிந்துவிடும் போல.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தே ஆகனும்ன்னு ஒரு கட்டாயமுமில்லையென்றாலும், நீங்கள் படம் பார்க்கவில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை!!!

      அருகம்புல் ஜூசை வயிறுமுட்ட குடித்துவிட்டு, அரக்க பரக்க வந்து, தண்டை மட்டுமே சாப்பிடுவதற்க்கு அது ஒன்றும் கிட்னியில் கல் இருக்கிற யானை அல்ல என்றே நினைக்கிறேன்

      அப்புறம் பழங்குடியினர் ,அய் ஆர் எட்டும் ஆடுதுறை முப்பதும் விளைவிக்கும் பாரம்பரியமான பக்கா விவசாயிகள் என்ற உங்களின் அனுமானமும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை...

      உங்கள் தாத்தாவுக்கும் எங்கள் தாத்தவுக்குக்குமே...... எப்படி நிறைய இடைவெளி இருந்ததோ, அது போலவே நமக்கும், நமது வயதை ஒத்த பழங்குடிகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியென்பது மடுவுக்கும் மலைக்குமானது.பழக்க வழக்கம் என்பதற்கும், ஹெரிடிட்டி என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது....நகரம்சார்ந்தவாழ்க்கையிலிருந்துதான், கணக்கீடுகளை தொடங்குவேன் என்று அடம்பிடிக்கும் உங்களை நான் என்ன செய்யமுடியும்?

      இப்போதும் எங்கள் காடுகளில் காட்டுநாய்கள் இருக்கிறது, உங்கள் வீடுகளில் நாட்டு நாய்கள் இருக்கிறதா?, வரையாடு இருக்கிறது....., உங்கள் வீடுகளில் நாட்டாடு இருக்கிறதா? காட்டெருமை இருக்கிறது,. உங்கள் வீடுகளில் நாட்டெருமை இருக்கிறதா? காட்டுமாடு இருக்கிறது, உங்கள் வீடுகளில் நாட்டுமாடு இருக்கிறதா? காட்டுக்கோழி இருக்கிறது உங்கள் வீடுகளில் நாட்டுகோழி இருக்கிறதா?

      உங்கள் வீடுகளில் இல்லாத இவைகள் எல்லாம் எங்கள் மத்தியில்தான் பெரும்பாலும் இருக்கிறது, மேலும், மேலே சொன்ன எல்லாவகையான காட்டுவிலங்குகளும் பத்திரமாக இருக்கிறது, என்று நீராடியில் இருபத்தியொன்பதே வயதான குருந்தாசலம் கேட்டதும் பேசியதும், இன்னும் எனக்கு மறக்ககூடியதாக இல்லை...,
      மனிதன் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிடுவதில் எப்பவுமே ஒரு செளகரியம் இருக்கிறதுஇல்லையா?மோகன்

      Delete
  19. இன்று வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம்.நேரம் இருந்தால் வந்து பாருங்கள்
    http://blogintamil.blogspot.com/2013/01/2520.html

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹஹா... தன்னடக்கத்துடன் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் .............................ரியாஸ்

      Delete
  20. unmai palangudi makkalukum mirugangalukum sandai vanthathaga paper news kuda kidayadhu.realestate prokar-arasiyalvadhigalin kollai than kadukalai vitru vana vilangukalin irupidathai akkiramipatharku edhirana porattathai kochai paduthiyullar salamon

    ReplyDelete
  21. nermayana padhivu.yanaigalukum,paganukum,palangudikalukum,ulla uravai innum alagaga solli irukalam

    ReplyDelete
  22. thanks for your comment, Tamil murasu

    ReplyDelete
  23. எவ்வளவு அழகா ,மனசுக்கு நெருக்கமா எழுதி இருக்கீங்க ...நல்ல எழுத்து நடை . நிரம்ப பாராட்டுகிறேன் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நன்றி தோழர் , நீங்கள் வாழ்த்துவது மகிழ்வளிக்கிறது

    ReplyDelete
  25. சிறந்த விமர்சனம் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  26. நண்பா,

    உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

    ReplyDelete
  27. நண்பா
    உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக