பழங்குடிகள் காட்டுக்குள் இருக்கலாம் ஆனால் எப்போது வனத்துறை சட்டிய தூக்கசொன்னாலும் தூக்கிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களே ஏதாவது ஒரு கேசைப்போட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் . இது 2005 வரை இருந்த நிலமை. ஆனால் வனச்சட்டம் 2006 வந்த பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஜமீன்தாராக கெட்ட ஆட்டம்போட்ட வனத்துறை ,தனது குண்டாந்தடியை கீழே போடவேண்டியதாயிற்று. ‘’வனச்சட்டம் 2006’’ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? ஆம் என்றுகூட சொல்லலாம். வனச்சட்டம் 2006 பழங்குடிமக்களின் நில உரிமையை உறுதி செய்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஏக்கர்வரை பட்டாப்போட்டு கொடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக்கூறியது கடுக்காய் நெல்லிக்காய் பூச்சைக்காய் புளி போன்ற பொருட்களை அவர்களே எடுத்து அவர்களே விற்பனை செய்துகொள்ளலாம் என்றது வனக் கிராமங்களை தேவைப்பட்டால் வருவாய்க் கிராமங்களாகக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றது யார் யார்க்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை மேலிருந்து யாரும் முடிவு செய்யக்கூடாது பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட கிராமசபையே முடிவு செய்யும் என்றது (இ...