Skip to main content

சப்பெ கொகாலு


Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் ...

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்...

சித்திராக்களும் மாரிகளும்

கோவையிலிருந்து வெகு தொலைவுதள்ளி அடர்வனங்களுக்குள்ளிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தோம் . சிண்டிகேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் பார்த்திபன் குழந்தைகளுக்கான சீருடைகளை ஏற்பாடு செய்திருந்தார் அவரே நேரடியாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து எடுத்துக்கொண்டுவந்திருந்தார். 'நானும் உங்களோடு பைக்கிலேயே வந்துடறேன் சார்' கூடவே அமர்ந்துகொண்டு மொத்தமாக 80 கிலோமீட்டரை இருசக்கரவாகனத்திலேயே கடந்துவந்தார். குண்டும் குழியும், யானைப்பிளிறலும் நிறைந்த சாலையில் எந்த இடத்திலும் அவரிடத்தில் சலிப்பையோ களைப்பையோ காணமுடியவில்லை. வரும்வழியெல்லாம் மலைப்பகுதிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.. தனது தந்தை தொடக்கப்பள்ளி ஆசிரியாக இருந்ததை ஓரிரு இடங்களில் குறிப்பிட்டார். 11.40 க்கு பள்ளிக்கு போய்விட்டோம். காட்டில்கிடைத்த பூக்களைதொடுத்து ஒரு பொக்கேபோலாக்கிக்கொடுத்து குழந்தைகள் வரவேற்றார்கள் வாஞ்சையுடன் அதைவாங்கிக்கொண்டார் 'நோ..பார்மாலிட்டி' சொல்லிவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் ஒவ்வொருவராய் அழைத்து சீருடையைக் கொடுத்தார் அநேகமாக இது அவரது தந்த...